ஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

மின்வாரிய முறைகேடு வழக்கு: தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

மின்வாரிய முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அதிரடி சோதனை குறித்து...

News image

தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - கோப்புப்படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 10:50 am IST

மின்வாரிய முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்வாரியத்தில் பணியிட மாறுதல், அலுமினியம் உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு புகாரின் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் மூன்று இடங்களில் மின்வாரிய ஒப்பந்ததாரர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றன.

தமிழக மின்வாரியத்திற்கு மின் கடத்தி விநியோகம் செய்ததில் முறைகேடு இருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து மேட்டூரில் சிட்கோ தொழிற்பேட்டை ஸ்ரீ சாய் முருகன் கண்டக்டர்ஸ், குஞ்சாண்டியூரில் ராம் கண்டக்டர்ஸ், கோனூரில் ஜெயஸ்ரீ கண்டக்டர்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று குழுக்களாக பிரிந்து 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறுகையில், புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். முறைகேடு நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைக்கும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Summary

Electricity Board Irregularity Case: Directorate of Vigilance and Anti-Corruption Raids at 51 Locations Across Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.