இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 20 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
மத்திய அமைச்சர் அமித் ஷா - முதல்வர் விஜய்.
மாநாடு தொடங்கியது!
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்திக்கு மாணிக்கம் தாகூர் புகழஞ்சலி!
தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 20) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு, திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் வெற்றிக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வருகின்றன.
பெ. சண்முகம் கடும் கண்டனம்!
கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு குறித்த விவரங்களைக் கேட்ட வட்டாட்சியரின் இடமாற்றம் அரசின் மோசமான அணுகுமுறை என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







