புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

எம்.பி.க்களுக்கு தேவையானது இதுதான்... ஜோதிமணி கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஜோதிமணி எம்.பி. கோரிக்கை விடுத்தது குறித்து...

Jothimani | Vijay

முதல்வர் விஜய்யுடன் ஜோதிமணி எம்.பி. - கோப்புப் படம்

Published On :

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோதிமணி எம்.பி. பேசியதாவது, "நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டப்பேரவை உறுப்பினரோ எல்லோருமே வசதியாக இருப்பதில்லை. எம்.பி.க்களுக்கும் தேவை என சில இருக்கின்றன.

எம்எல்ஏ, எம்.பி. என யாராக இருந்தாலும், அவர்களின் தொகுதியில் அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், அவர்களால் அனைத்து ஊர்களுக்கும் சென்றுவிட முடியாது. பிரதமர் மோடி ஆட்சியில் பெட்ரோல் குறைந்த விலையில் இருக்கிறதா?

என்னுடைய தொகுதியில் 4 மாவட்டங்கள் வருகின்றன. திண்டுக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை என திண்டுக்கல் ஆட்சியரகத்தில் தொடங்கி, புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் எனது தொகுதி முடிவடைகிறது. இதில் எரிபொருள் செலவு எவ்வளவு இருக்கிறது?

நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேர்மையாக இருக்க வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தருவதில் தவறில்லை.

எம்.பி.க்கள் சார்பாகவும் கோரிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் எம்.பி.க்களுக்கென தனி அலுவலகம் கிடையாது. அரசு கட்டிக் கொடுத்த அலுவலகங்கள் எதுவும் கிடையாது. நான் 7 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகே ஓர் அலுவலகத்தை வாங்கியுள்ளேன்.

ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, மக்கள் எளிதில் வந்து செல்லும்வகையில், தமிழ்நாடு அரசு அலுவலகம் கட்டித் தர வேண்டும். எங்களுக்கு கார் எதுவும் வேண்டாம்" என்று தெரிவித்தார்.

Summary

Congress MP Jothimani requests the Tamil Nadu government to construct offices for Members of Parliament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.