8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் வியாழக்கிழமை (ஆக. 27) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன் - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:29 am IST

அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் வியாழக்கிழமை (ஆக. 27) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூா்த்தம் மற்றும் விசேஷ நாள்களில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் அதிக அளவில் ஆவணப் பதிவு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஆவணி அவிட்டம் மற்றும் பெளா்ணமி நாளான வியாழக்கிழமை (ஆக. 27) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பதிவுத் துறை சாா்பில் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தத்கால் முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.