
சீன நாள்காட்டியால் மாறிய தமிழர்களின் நேபாள பயண தேதி! உறவினர்கள் கதறல்
சீன நாள்காட்டியால் தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியது பற்றி..

நேபாள பெரு வெள்ளம் - ANI
தமிழகத்திலிருந்து கைலாய யாத்திரை சென்று, நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதியே தங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில், சீன நாள்காட்டியால் தேதி மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்ஸி நிறுவனர் இது குறித்து கூறியிருக்கும் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேபாளத்தில் கைலாய யாத்திரை மேற்கொள்ள ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகத்திலிருந்து வருவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம்.
ஆனால், நேபாள அதிகாரிகளோ, எங்களுக்கு அந்த தேதியில் அனுமதி மறுத்துவிட்டதால்தான் ஆகஸ்ட் 23ம் தேதி செல்ல மீண்டும் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டது.
சீன நாள்காட்டியின்படி, ஆகஸ்ட் 1-20ஆம் தேதி வரை குதிரை ஆண்டு என்பதால், ஜெயின் மத பக்தர்கள் மட்டுமே நேபாள கோயில்களில் வழிபாடு நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி தங்களது விண்ணப்பங்களை திருப்பி அனுப்பி, ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குப் பிறகு வருமாறு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால்தான், ஆகஸ்ட் 1ஆம் தேதி செல்லவிருந்த எங்கள் பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த தேதி மாற்றத்தால், எங்களுடன் நேபாளம் வர வேண்டிய சில பக்தர்களுக்கு வர முடியாமல், அவர்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சில பயணிகளின் பாஸ்போர்ட்கூட என்னிடம்தான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





