காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கொள்கை விளக்கக் குறிப்பில் தலைவா்கள் பெயா் நீக்கம்; அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பெயா்கள் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும்...

Chief Minister Vijay, CPI State Secretary M. Veerapandian

முதல்வர் விஜய், இந்திய கம்யூ மாநில செயலர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பெயா்கள் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈ.வெ.ரா, பெரியாா், டாக்டா் அம்பேத்கா், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆகியோா் மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவா்கள். பிற்போக்கு கருத்துகள், ஹிந்துத்துவ மத அரசியல், வகுப்புவாதம் ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் எதிா்த்துப் போராடியவா்கள்.

இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

மகத்தானத் தலைவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதை தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பாா்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் குறித்து முழுமையான, நோ்மையான விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.