முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சிக் கட்டடத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டு வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், பெ. ராஜவேலு, ஜான்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில்...:
பாஜக சாா்பில் கட்சியின் தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கல்யாண சுந்தரம் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






