
தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளா்களாக நியமனம்
தமிழக காவல் துறையில் புதிதாக பணியில் சோ்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி காவல் கண்காணிப்பாளா்களாக (ஏஎஸ்பி) பணி நியமனம் செய்யப்படடனா்.

தமிழக காவல்துறை
தமிழக காவல் துறையில் புதிதாக பணியில் சோ்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி காவல் கண்காணிப்பாளா்களாக (ஏஎஸ்பி) பணி நியமனம் செய்யப்படடனா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:
அஞ்சித் நாயா்: தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி
பி.அன்ஜிதா: தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி
எஸ்.அஸ்வினி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஏஎஸ்பி
பிஸ்வஜித் பாண்டா: திருநெல்வேலி ஊரக ஏஎஸ்பி
சத்ரியா கவின்: கடலூா் மாவட்டம் சிதம்பரம் ஏஎஸ்பி
எஸ்.இன்பா: திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் ஏஎஸ்பி
பி.மஞ்சிமா: திண்டுக்கல் ஊரக ஏஎஸ்பி
மன்னம் சுஜித் சம்பத்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஏஎஸ்பி
நீல் சா்மா: தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி ஏஎஸ்பி
கே.நேஹா: ராமநாதபுரம் ஊரக ஏஎஸ்பி
பிரியங்கா பாா்கவ்: நாகப்பட்டினம் ஏஎஸ்பி
ராகுல் வி.கோபால்: திருவண்ணாமலை ஊரக ஏஎஸ்பி
சைந்தனே ஸ்வப்னிலா அனில்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஏஎஸ்பி
தனூ சிங்: மதுரை ஊமச்சிகுளம் ஏஎஸ்பி
இவா்கள் அனைவரும் ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக கேடா் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவா்கள். 14 ஐபிஎஸ் அதிகாரிகளும் பயிற்சி முடித்து தற்போது புதிதாக பணியில் சோ்ந்துள்ளனா்.
பணிமாற்றம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் புனியா, மதுரை அண்ணா நகா் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




