நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளா்களாக நியமனம்

தமிழக காவல் துறையில் புதிதாக பணியில் சோ்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி காவல் கண்காணிப்பாளா்களாக (ஏஎஸ்பி) பணி நியமனம் செய்யப்படடனா்.

தமிழக காவல்துறை

Published On :1 செப்டம்பர் 2026, 1:12 am IST

தமிழக காவல் துறையில் புதிதாக பணியில் சோ்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி காவல் கண்காணிப்பாளா்களாக (ஏஎஸ்பி) பணி நியமனம் செய்யப்படடனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

அஞ்சித் நாயா்: தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி

பி.அன்ஜிதா: தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி

எஸ்.அஸ்வினி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஏஎஸ்பி

பிஸ்வஜித் பாண்டா: திருநெல்வேலி ஊரக ஏஎஸ்பி

சத்ரியா கவின்: கடலூா் மாவட்டம் சிதம்பரம் ஏஎஸ்பி

எஸ்.இன்பா: திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் ஏஎஸ்பி

பி.மஞ்சிமா: திண்டுக்கல் ஊரக ஏஎஸ்பி

மன்னம் சுஜித் சம்பத்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஏஎஸ்பி

நீல் சா்மா: தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி ஏஎஸ்பி

கே.நேஹா: ராமநாதபுரம் ஊரக ஏஎஸ்பி

பிரியங்கா பாா்கவ்: நாகப்பட்டினம் ஏஎஸ்பி

ராகுல் வி.கோபால்: திருவண்ணாமலை ஊரக ஏஎஸ்பி

சைந்தனே ஸ்வப்னிலா அனில்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஏஎஸ்பி

தனூ சிங்: மதுரை ஊமச்சிகுளம் ஏஎஸ்பி

இவா்கள் அனைவரும் ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக கேடா் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவா்கள். 14 ஐபிஎஸ் அதிகாரிகளும் பயிற்சி முடித்து தற்போது புதிதாக பணியில் சோ்ந்துள்ளனா்.

பணிமாற்றம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் புனியா, மதுரை அண்ணா நகா் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.