FOLLOW US

ON GOOGLE DISCOVER

கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

தவெக அரசுக்கு எத்தனை மதிப்பெண்? நயினார் நகேந்திரன் பதில்! தேர்ச்சி பெற்றதா?

தவெக அரசுக்கு மைனஸ் 80 மதிப்பெண் என்று நயினார் நகேந்திரன் சொன்னது குறித்து..

Nayinar nagendran

நயினார் நாகேந்திரன் - எக்ஸ்

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:48 pm IST

தமிழ்நாட்டில் நடக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் என்று நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஜாதி, மத விவகாரங்களை பேசுவது தேவையற்றது; நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசுகையில், ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை வரவேற்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஒரு அமைச்சர் சட்டப்பேரவையில்தான் கிறிஸ்தவர் என்று கூறுவதும், அவைத் தலைவரும் தான் கிறிஸ்தவர் என்று கூறுவதும் போன்ற மோசமான சூழல் தற்போது பேரவையில் நிலவுகிறது. ஜாதி, மதம் தொடர்பான பேச்சுகள் தேவையற்றவை.

பேரவையில் பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இதற்கு முன்பு அவைத் தலைவராக இருந்த அப்பாவு கூட, தான் கிறிஸ்தவர் என்று ஒரு நாளும் சட்டப்பேரவையில் கூறியதில்லை. முதல்வரும் சிறுபான்மையினர் அரசு என்று கூறுகிறார். இவ்வாறு மதம் தொடர்பான விஷயங்களை பேரவையில் பேச வேண்டிய அவசியம் என்ன?

மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய பேரவை நேரத்தை தேவையில்லாத விவாதங்களால் வீணடிக்கிறார்கள். இதன் மூலம் மக்களை பைத்தியக்காரர்களாக்கும் நிலை ஏற்படுகிறது.

நவகாளி சம்பவம் குறித்து கேள்வி?

சட்டப்பேரவையில் நவகாளி சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுன் விவாதிக்க தயாரா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் ஆதவ் அர்ஜுன் பிறந்திருக்கவே மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவைக்குள்தான் செல்ல வாய்ப்பில்லாததால் ஆதவ் அர்ஜுனிடம் நேரடியாக இந்தக் கேள்வியை எழுப்புவதாகவும், சட்டப்பேரவையில் தேவையில்லாத விஷயங்களை பேச வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு – நாடகமா?

விஜய் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என அமைச்சர்கள் பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது நாடகமா, நடக்காத விஷயத்தை பேசுகிறார்களா என்று தெரியவில்லை என்றார்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கே உண்மை நிலை தெரியும் என்றும், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதும், அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்பதும் இவர்களுக்கு தெரியும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியினர் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள். தி.மு.க.வுடன் 15 ஆண்டுகள் நம்பிக்கையாக இருந்தவர்கள், தற்போது ஒரு நிமிடத்தில் ஓடி வந்துவிட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

தமிழக அமைச்சர் ராஜேஷ் இந்த கருத்தை கூறியிருந்தால், அதில் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வை தாங்கள் மட்டுமே நேரடியாக எதிர்ப்பதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, நாங்கள் என்ன சிலம்புச் சண்டையா போடுகிறோம்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

ஐ.ஆர்.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இதுகூட தெரியவில்லை என்றால் என்ன செய்வது என்றும் அவர் விமர்சித்தார்.

அதிகாரிகளை குறை கூறக்கூடாது!

அரசு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “இந்த அரசிடம் எந்த ரகசியமும் இல்லை” என்றார்.

முதல்வர் வாய் திறந்து பேசவில்லை; பொதுக்கூட்டங்களிலும் பேசவில்லை. இந்நிலையில் அதிகாரிகளை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னுடைய திறமையின்மையை அதிகாரிகள் மீது பழியாக சுமத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்

தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சிக்கு வைகோ மதிப்பெண் வழங்கியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், நான் இந்த ஆட்சிக்கு மைனஸ் 80 சதவீதம் மதிப்பெண் கொடுக்கிறேன் என்றார்.

ஆளும் அரசு தொடர்பான பொய் செய்திகள் மற்றும் பொய்யான ரீல்ஸ்கள் பரப்பப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். தேவையில்லாத பொய் செய்திகள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

தூத்துக்குடி அனல் மின் நிலைய அறிவிப்பு “ரீல்”

தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அது வெறும் “ரீல்” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

தாமிரபரணி ஆற்றை சீரமைப்பதற்காக சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இந்த திட்ட அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பினால், அதனைப் பெற்று நிதி மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.