காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

யாருடன் கூட்டணி? தில்லியில் தமிழக காங். நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

தில்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை...

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 12:22 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தில்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சித் தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்சியை மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் காங்கிரஸ் தலைமை பல்வேறு மாநிலங்களில் புதிய தலைவர்களை, நிர்வாகிகளை நியமித்து வருகிறது.

தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று தில்லியில் கட்சித் தலைமை ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கட்சியை வலுப்படுத்துவது மட்டுமின்றி கூட்டணி தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய கூட்டத்திற்கு பிறகு தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி குறித்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Party leaders holds meeting with TN Congress executives in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.