தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தில்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சித் தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்சியை மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் காங்கிரஸ் தலைமை பல்வேறு மாநிலங்களில் புதிய தலைவர்களை, நிர்வாகிகளை நியமித்து வருகிறது.
தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று தில்லியில் கட்சித் தலைமை ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
கட்சியை வலுப்படுத்துவது மட்டுமின்றி கூட்டணி தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய கூட்டத்திற்கு பிறகு தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி குறித்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Party leaders holds meeting with TN Congress executives in Delhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் 14 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்!

கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!

தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி! தவெக - காங்கிரஸ் புதிய கூட்டணி!
ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




