பட்டியலின நல நிதியை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதில்லை என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
பேரவையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகன்மூா்த்தி பேசுகையில், பட்டியலின நிதி மகளிா் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது தொடா்பான கருத்தைத் தெரிவித்தாா்.
அதற்கு அமைச்சா் மதிவேந்தன் அளித்த விளக்கம்: உறுப்பினா் தெரிவித்திருக்கும் தகவல் தவறானது. இப்போது உள்ள நடைமுறை மற்றும் கணக்குத் தணிக்கையின்படி ஒரு திட்டத்தின் நிதியை மற்றொரு திட்டத்துக்கு பயன்படுத்தவே முடியாது.
திமுக ஆட்சியில் அத்தகைய நடைமுறையே இல்லை. அதுமட்டுமல்லாது பட்டியலின மக்களுக்கான திட்டங்களுக்கு உரிய முறையில் நிதி செலவிடுவதற்கான சட்டத்தையே முதல்வா் நிறைவேற்றியுள்ளாா். ஒரு திட்டத்தில் முழுமையாக நிதி செலவிடப்படவில்லை என்றால்கூட மீதமுள்ள தொகை அதே நலத் திட்டத்துக்குத்தான் பயன்படுத்தப்படுமே தவிர, மாற்று திட்டங்களுக்கு வழங்கப்படாது. அதை உறுதிசெய்துதான் சட்டமே இயற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: திமுகவுக்கு வாக்களிக்க மதிவேந்தன் வேண்டுகோள்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

பட்டியலின மக்களுக்கான அரசு நிதி: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வழங்கினாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


