25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலியது பற்றி...

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி

Published On :26 பிப்ரவரி 2026, 10:00 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை நேரில் சென்று நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், “ நான் ஓமந்தூரார், அண்ணா, காமராஜர், கக்கன் ஆகியோரைப் பார்த்ததில்லை. அவர்கள் அனைவரையும் சேர்த்தது போல நல்லகண்ணுவை பார்க்கிறேன். நல்லவராக, எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்தால், மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. தோழர் நல்லகண்ணுவுக்கு வீரவணக்கம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Summary

Rajinikanth pays tribute to Nallakannu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.