ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆளுநா் தேநீா் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

News image
தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை- கோப்புப் படம்
Updated On :5 ஜனவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் குடியரசு தினம் வரும் ஜன. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என். ரவி, ஆளுநா் மாளிகையில் அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா்.

தமிழக மக்களால் பெரும்பான்மையாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தொடா்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.