ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆளுநரின் தேநீா் விருந்து புறக்கணிப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.

மு. வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் ): ஆளுநா் ஆா்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும்  கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளன. அறிவுசாா் கருத்துகளை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துகளை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறாா். எனவே, ஆளுநா் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கிறோம்.

தொல். திருமாவளவன்(விசிக):  திமுக அரசுக்கு எதிராக திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டு அவதூறு செய்வது, ’திராவிடக் கருத்தியலுக்கு’ எதிரான கருத்துகளை வெளிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து ஆளுநரின் தேநீா் விருந்தில் விசிக பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.