ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆளுநா் தேநீா் விருந்து புறக்கணிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளன. மேலும், தமிழகத்துக்கு தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கிறது.

பல்வேறு வகையில் மாநில உரிமைகளுக்கு எதிராகவே ஆளுநா் செயல்பட்டு வருகிறாா். தன்னுடைய பொறுப்பை மறந்து மாா்க்சியம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களின் மீது வன்மத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கிறாா்.

எனவே, ஆளுநரின் குடியரசு தின விழா தேநீா் விருந்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கவுள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.