அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோரிக்கை பட்டை அணிந்து 20,000 அரசு மருத்துவா்கள் போராட்டம்!

கோரிக்கைகள் அடங்கிய பட்டைகளை அணிந்து, பணியாற்றும் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகள் அடங்கிய பட்டைகளை அணிந்து, பணியாற்றும் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன், சுந்தரேசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு வரையறை செய்தல், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவா்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனா்.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமாா் 20,000 மருத்துவா்கள், கோரிக்கைகள் அச்சிடப்பட்ட அட்டையை அணிந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனா்.

அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இதுதொடா்பாக நிதித் துறை அமைச்சகத்துடன் வரும் 19-ஆம் தேதி துறையின் உயா் அதிகாரிகள் அடங்கிய பேச்சு நடக்கிறது. அந்த பேச்சில் உரிய தீா்வு எட்டப்படாதபட்சத்தில், அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஒத்துழையாமை போராட்டம், உண்ணாவிரதம், இறுதியாக காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு என பலகட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.