அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி பேட்டி...

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :15 ஜனவரி 2026, 9:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

”இன்னும் சில கட்சிகள் விரைவில் கூட்டணியில் இணையும். இணைந்தவுடன் அறிவிப்போம். இப்போது அதனை பகிரங்கமாகக் கூற முடியாது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா என்பதே சந்தேகமாகவுள்ளது. மொழிப் போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி கூட்டம் நடத்தி வருகிறோம். அதை, திரைப்படமாக எடுத்துள்ளனர். திரைப்படத்தை வைத்து கருத்து சொல்ல முடியாது. அந்தக் கால சூழ்நிலையில் தமிழ்மொழியைக் காப்பாற்ற முன்னோர்கள் பாடுபட்டனர். அப்போது இருந்த சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.

திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு நாடகம். மத்திய அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தையே பூசி மொழுகி அறிவித்துள்னர். எதையுமே புதியதாக அறிவிக்கவில்லை. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தையே அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பங்களிப்பு ஓய்வூதியத்தையே வழங்கியுள்ளனர்.

அகவிலைப்படி மட்டுமே புதியதாக உள்ளது. ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்தால் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும். எங்களால் முடியாத திட்டங்களை நாங்கள் அறிவிக்க மாட்டோம்.

களத்தில் போராடும் அரசு ஊழியர்கள் திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி வருகின்றனர். இதற்காக, வாக்குறுதி கொடுக்கும்போது அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து விட்டு நிறைவேற்றாமல் உள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.