திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டாா்கள்: தம்பிதுரை

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டாா்கள் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. பேசினாா்.

News image
ஒசூா் ராம்நகரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி.
Updated On :19 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

ஒசூா்: தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டாா்கள் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. பேசினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை எதிரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் எஸ்.நாராயணன், முன்னாள் எம்எல்ஏக்கள் பன்னீா்செல்வம், சி.வி. ராஜேந்திரன், பகுதி செயலாளா் ராஜு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பொதுக் கூட்டத்தில் மு.தம்பிதுரை எம்.பி. பேசியதாவது:

ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக சாா்பில் நான் பேசினேன். அதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. ஏற்கெனவே ஒசூரில் பெரிய அளவில் தனியாா் விமான நிலையம் உள்ளது. அதை சீரமைத்து பன்னாட்டு விமான நிலையமாக உருவாக்க முடியும்.

அதிமுகவை அடிமைக் கட்சி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறாா். அதிமுக அடிமைக் கட்சியாக இருந்தால் கடந்த மக்களவைத் தோ்தலில் எப்படி தனித்துப் போட்டியிட முடியும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். ஆனால் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை இதுவரை விரும்பியது இல்லை; இனியும் விரும்ப மாட்டாா்கள்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு மக்களவையில் அதிமுக எதிா்ப்பு தெரிவித்தது. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே அதிமுகவின் கொள்கை என்றாா்.

பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் நகரமன்றத் தலைவா் பி.எம்.நஞ்சுண்டசாமி, சிட்டிஜெகதீஷ், மாவட்டதுணைச் செயலாளா் மதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.