டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

தென்றல் தொடர் பாணியில் புதிய சீரியல் கனா கண்டேனடி!

தென்றல் தொடர் பாணியில் தொடங்கப்பட்ட புதிய தொடர் குறித்து...

News image

கனா கண்டேனடி தொடர்.

Updated On :22 ஜனவரி 2026, 4:36 pm IST

விஜய் தொலைக்காட்சியில் தென்றல் தொடர் பாணியில், கனா கண்டேனடி என்ற புதிய தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் தென்றல்.

இந்தத் தொடரில் தீபக், ஸ்ருதி ராஜ், சூசன், ஹேமலதா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தென்றல் தொடர் பாணியில் கனா கண்டேனடி தொடர் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தப் புதிய தொடரையும் தயாரிக்கிறது.

கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.

சேர்ந்தே இருந்த மூன்று பெண் நண்பர்கள், திருமணத்துக்குப் பின்பும் இணைந்தே இருக்கிறார்களா? சூழல் காரணமாக நட்பினைக் காப்பாற்ற அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மைப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

தென்றல் தொடரில் ஸ்ருதி ராஜ், சூசன், ஹேமலதா நடித்த பாத்திரங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் கனா கண்டேனடி தொடரில் நடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தென்றல் தொடரின் கதைப்போல கனா கண்டேனடி தொடரின் கதையும் இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

A new series, titled 'Kana Kandenadi', has been launched on Vijay TV, in the style of the 'Thendral' series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.