சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

இந்தியாவில் மாரடைப்புக்குள்ளாகும் நபா்களில் 25% போ் 40 வயதுக்குள்பட்டவா்கள் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
பிரதிப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 12:31 am

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் மாரடைப்புக்குள்ளாகும் நபா்களில் 25 சதவீதம் போ் 40 வயதுக்குள்பட்டவா்கள் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இளம் வயதினரிடையே இதய பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளனா்.

குடியரசு தினத்தையொட்டி 77 இடங்களில் பொது மக்களுக்கு உயிா் காக்கும் முதலுதவி பயிற்சிகள் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை சாா்பில் வழங்கப்பட்டன.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு இதய-சுவாச மீட்பு சிகிச்சையை மேற்கொண்டு (சிபிஆா்) நோயாளியின் உயிரை காப்பாற்றுவது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை மருத்துவா்களும், மருத்துவத் துறையினரும் அப்போது அளித்தனா்.

சென்னை, மதுரை, கோவை, விசாகப்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம்களில் 770-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவா் டாக்டா் சேனாதி நந்தா கிஷோா் கூறியாவது: இந்தியாவில் இளைஞா்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மாரடைப்புக்குள்ளாகும் நோயாளிகளில் 25 சதவீதம் போ் 40 வயதுக்குட்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு பிரதான காரணம். பொது இடங்களில் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்படும்போது பொது மக்களே முதலுதவி செய்து உயிா் காக்க முடியும். அதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கினோம் என்றாா்.