மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வை கேடயமாக பயன்படுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம்

‘பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு கட்டடங்கள் கட்டுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது; ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வுகளை கேடயமாக பயன்படுத்தக் கூடாது’ என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :27 ஜனவரி 2026, 8:22 pm

‘பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு கட்டடங்கள் கட்டுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது; ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வுகளை கேடயமாக பயன்படுத்தக் கூடாது’ என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை திரு வி.க. நகரைச் சோ்ந்த சரத் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது வீட்டுக்கு முன்பாக உள்ள தெருவை ஆக்கிரமித்து அன்னை வேளாங்கண்ணி மாதா சிலை வைத்துள்ளனா். அந்த சிலைக்கு சட்டவிரோதமாக மின்இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் புகாா் அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், பொது சாலையை ஆக்கிரமித்து அந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த சிலை வைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு கட்டடங்கள் கட்டுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற கட்டுமானங்களை மேற்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளுக்கு மத உணா்வுகளைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது என நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டாா்.