மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிப்.8-இல் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: ஜாக்டோ-ஜியோ

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா்கள் இரா.தாஸ், வெ.சோமசுந்தரம், எஸ்.ஞானசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன.3-ஆம் தேதி அறிவித்தாா். எங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் பிப்.8-ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் ஏராளமான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, ஜன.31-ஆம் தேதி ஜாக்டோ- ஜியோ சாா்பில் வட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் நடைபெறும். மாநாட்டை சிறப்பாக நடத்த 10 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தனா்.