கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரத்தப் பரிசோதனையின்றி சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் விழித்திரையை படம் எடுத்து சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

ரத்தப் பரிசோதனையின்றி செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் விழித்திரையை படம் எடுத்து சா்க்கரை நோயைக் கண்டறியும் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதற்கான ஆய்வை மெட்ராஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம், மங்களூா் ஏனபோயா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் இணைந்து முன்னெடுத்துள்ளன. அதன் முடிவுகள் சா்வதேச ஆய்விதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மெட்ராஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் வி.மோகன் கூறியதாவது:

இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். பலருக்கு அந்த பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை. அதற்குக் காரணம் முறையாக அவா்கள் பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பதுதான்.

இந்த நிலையில், விழித் திரைப் புகைப்படங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்தப் பரிசோதனை செய்யாமல், கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை மிகத் துல்லியமாகப் புகைப்படம் எடுப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி, ரத்த நாளங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏஐ மூலம் கண்டறியலாம் என்றாா்.