ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுயநலத்துக்காக ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பாஜக

சுயநலத்துக்காக ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்து...

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள்  அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் - கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 10:35 am IST

சுயநலத்துக்காக ராஜிநாமா செய்யும் எம்எல்ஏ-க்களை ஜனநாயகத்தை சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

திருவொற்றியூரில் செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "தவெகவினர் ஒரு தூய சக்தி என்பதனை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. எவ்வளவு வரிப்பணம் வீணாகிறது.

80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம், மக்களின் எண்ணங்களை மதிக்காமல் சுயநலத்துக்காக ராஜிநாமா செய்கிறார்கள். சுயநலத்துக்காக ராஜிநாமா செய்யும் எம்எல்ஏ-க்களை ஜனநாயகத்தை சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

பணத்தைக் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுக்கு அவசியமில்லை. தவெக ஆட்சியைக் கவிழ்க்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று தெரிவித்தார்.

Summary

People will not forgive MLAs who resigned for selfish reasons, says BJP Leader Tamilisai Soundararajan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.