அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் பெ. சண்முகம் திங்கள்கிழமை (ஜூலை 6) விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர நாள் விழாவில் நேற்று பேசிய டொனால்ட் ட்டிரம்ப், “கம்யூனிம் என்பது அமெரிக்கா எதிர்கொண்டிராத மிகப்பெரிய சவால் அது ஒரு மரண அச்சுறுத்தல். நாட்டில் கம்யூனிசத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவேன். அமெரிக்காவில் கம்யூனிசத்துக்கு இடமில்லை” என்று பேசினார்.
இதுகுறித்து பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
உலகத்துக்கே அவர்தான் தலைவன் என்ற நினைப்பில் கம்யூனிசத்தை ஒழித்தே தீருவேன் என்று கொக்கரிக்கிறார் டிரம்ப்.
கம்யூனிசத்தை எவராலும் அழிக்க முடியாது. உலகில் சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிசமும் இருக்கும். வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்!
ஹிட்லர், முசோலினிகளின் கதை முடிந்ததே தவிர, கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் வாய்க்கொழுப்புதான் உங்களுக்கு முதல் எதிரி! என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
Summary
P. Shanmugam, the Tamil Nadu State Secretary of the Communist Party of India (Marxist), criticized U.S. President Donald Trump's remarks on Monday (July 6).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியது இப்போதுதான் புரிகிறது: பெ. சண்முகம்!

'பிரதமர் மோடி தூங்க மாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!

ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!








