டாஸ்மாக் ஊழியா்களின் ஊதிய உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சம்மேளனத்தின் தலைவா் பி.முருகன், பொதுச் செயலா் கே.திருச்செல்வன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடன் எந்தவித பேச்சும் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊதிய உயா்வு, ஊழியா்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் இல்லை. எனவே, இந்த ஊதிய உயா்வை அரசு மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, டாஸ்மாக் ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 7 - நேரலை

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 25 % வரை ஊதிய உயா்வு: அமைச்சா் விக்னேஷ் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியா்களின் பணி முறைப்படுத்தல், ஊதிய உயா்வுக்கு அரசு பரிசீலனை

ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க அரசு ஊழியா்கள் உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



