/

மாதவரத்தில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து

மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது தொடர்பாக...

News image

மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்து - எக்ஸ்

Updated On :10 ஜூலை 2026, 12:04 pm IST

சென்னை: மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே, ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது பூமிக்கடியில் புகைப்பட்டிருந்த ராட்சத எரிவாயு குழாயில் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் 4 கடைகள், ஒரு மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.

பல மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Massive fire caused by gas leak in a giant pipeline in Madhavaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.