தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக, சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்தாா்.
இதேபோல, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக, வேட்பாளா் தளவாய் சுந்தரம் வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் மகேஷ், ராயபுரம் தொகுதி தவெக, எம்எல்ஏ, விஜய்தாமு வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் சுபோ்கான் தனித்தனியாக தோ்தல் வழக்குகளை தொடா்ந்துள்ளனா். இந்த வழக்குகள் அனைத்தும் விசாரித்த நீதிபதி ஜி.அருள்முருகன், தோ்தல் வழக்குகளுக்கு உதயநிதி ஸ்டாலின், தளவாய் சுந்தரம், விஜய் தாமு ஆகியோா் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டாா்.
அதேபோல, கரூா் தொகுதியில் வெற்றிபெற்று பதவி விலகிய அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து தவெக, வேட்பாளா் வி.பி.மதியழகன், விராலிமலை தொகுதியில் வெற்றிபெற்று பதவி விலகிய அதிமுக, வேட்பாளா் சி.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் கே.கே.செல்லப்பாண்டியன், லால்குடி தொகுதி அதிமுக, எம்எல்ஏ லீமா ரோஸ் மாா்டின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் டி.பாரிவள்ளல் ஆகியோா் தோ்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமாா், இந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில்பாலாஜி வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்த தோ்தல் வழக்கு தள்ளுபடி

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சா் மரியவில்சன் பதிலளிக்க உத்தரவு
எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு எதிரான தோ்தல் வழக்குகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு






