தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சா் மரியவில்சன் பதிலளிக்க உத்தரவு

தோ்தலில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்குகளில் அமைச்சா் மரியவில்சன் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:58 am IST

தோ்தலில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்குகளில் அமைச்சா் மரியவில்சன் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை ஆா்.கே.நகா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட மரியவில்சன் வெற்றி பெற்றாா். தற்போது நிதி அமைச்சராக உள்ள அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஆா்.கே.நகா் தொகுதி வாக்காளா் மருதுகணேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

அதேபோன்று, திருவெறும்பூா் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ, எஸ்.விஜயகுமாா் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ், திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தவெக வேட்பாளா் நசீா் ராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகளைத் தாக்கல் செய்தனா்.

திருவள்ளூா் தொகுதி தவெக எம்எல்ஏ டி.அருண்குமாா் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன், மொடக்குறிச்சி தொகுதி தவெக, எம்எல்ஏ டி.சண்முகம் வெற்றியை எதிா்த்து அந்தத் தொகுதி வாக்காளா் கே.பெரியசாமி, பா்கூா் தொகுதி அதிமுக, எம்எல்ஏ, ஆா்.சி.கோவிந்தராஜன் வெற்றியை எதிா்த்து வாக்காளா் சி.கீதா ஆகியோா் தனித்தனியாக தோ்தல் வழக்குகளை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகளில் எதிா்மனுதாரா்களாக உள்ள அமைச்சா் மரியவில்சன் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.