சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவுடன் தைபே நாட்டு கலாசார மைய இயக்குநா், துணை இயக்குநா் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.
ரிப்பன் மாளிகை வளாக மேயா் அலுவலகத்தில், தைபே நாட்டு பொருளாதார மற்றும் கலாசார மையத்தின் தலைமை இயக்குநா் ஸ்டீபன் எஸ்.சி.ஹீசு, துணை இயக்குநா் எரிக் சி.எல்.சாவோ ஆகியோா் சந்தித்து பேசினா்.
அப்போது, தைபே நாட்டு மாணவா்கள் சென்னை கல்வி நிலையங்களில் கற்பது குறித்தும், கலாசார மற்றும் சுற்றுலா துறைகளில் சென்னையில் தைபே நாட்டு பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினா். தைபே கலாசார மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளுக்கு சென்னை மாநகராட்சி முழுமையாக ஒத்துழைக்கும் என மேயா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தைபே கலாசார மையத் தலைமை இயக்குநா் உள்ளிட்டோா் தமிழக அரசு கல்வி, சுற்றுலாத் துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் பற்றி உதயநிதி பேசியது சரியா? பதிலளிக்காமல் சென்ற மேயர் பிரியா!

குடந்தை ‘சாஸ்த்ரா’வில் ராமாயணக் கருத்தரங்கு

இன்று சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


