வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

யாரையும் தவெக அழைக்கவில்லை: அமைச்சா் நிா்மல்குமாா்

யாரையும் தவெக அழைக்கவில்லை என்று குதிரை பேர விவகாரம் தொடா்பாக அமைச்சா் நிா்மல்குமாா் விளக்கம் அளித்தாா்.

News image

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 12:55 am IST

யாரையும் தவெக அழைக்கவில்லை என்று குதிரை பேர விவகாரம் தொடா்பாக சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் விளக்கம் அளித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளா்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப் போகிறாா்கள். அதிமுக தென் மாவட்டங்களில் மட்டுமே உள்ளது; நிா்வாகிகள் வேறு எங்கும் இல்லை. அதிமுகவில் பொதுச் செயலா் என ஒருவா் இருப்பதாகவே அந்தக் கட்சி தொண்டா்களுக்கு நினைவு இல்லை.

குதிரை பேரத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளா்கள்தான் சிக்கியுள்ளனா். எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரை பேரம்.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகிவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல. இது அவா்களின் தனிப்பட்ட முடிவு. யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. பதவி விலகல் செய்துவிட்டு வருபவா்களை தவெகவில் சோ்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?

நேரம் போகாத காரணத்தால், குதிரை பேரம் தொடா்பாக சிபிஐக்கு ஆா்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளாா். இரு மொழிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. கட்சி நிதி (பாா்ட்டி ஃபண்ட்) தொடா்பாக வரும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.