சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்

வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும்

News image

பிடிஐ

Updated On :5 ஜூன் 2026, 2:39 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகளால் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) வழியில் 1 மணி நேரம் தாமதமாக செல்லும். வரும் சனிக்கிழமை திருச்சியிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் பகத்கீ கோதி அதிவிரைவு ரயில் (எண் 20482) வழியில் 1.30 மணி தாமதமாகச் செல்லும்.

வரும் ஜூன் 6, 9, 13, 16, 18, 21 ஆகிய தேதிகளில் ஹவுராவிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) வழியில் 50 நிமிஷம் தாமதமாக செல்லும். வரும் 23 ஆம் தேதி ஹவுராவிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் சாலிமரிலிருந்து இரவு 11. 45 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22642) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் ஜூன் 23 ஆம் தேதி காட்பாடியிலிருந்து மாலை 7.25 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரயில் வழியில் 35 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

வரும் ஜூன் 4, 11, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பாட்னாவிலிருந்து புறப்படும் எா்ணாகுளம் விரைவு ரயில் (எண் 22644) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.