அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ரூ. 634 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு!

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதைப் பற்றி...

News image

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.

Updated On :5 ஜூன் 2026, 9:33 pm IST

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு செயல்பட்டு வந்தார்.

திமுக ஆட்சியில், இவரது தலைமையிலான நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம், டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித்திட்டங்கள் மூலம் ரூ. 1020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஊழலுக்கு ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது.

நகராட்சி நிர்வாகத்துறையில் மட்டும் ரூ. 634 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. மேலும், இந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யவும் அமலாக்கத்துறை அறிவுறுத்தியது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

கே.என். நேரு மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதியிருந்தது.

இந்த நிலையில், ஊழல் , லஞ்ச புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ. 634 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் கே.என். நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல், லஞ்சப்புகாரில் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் கே.என். நேரு மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The Directorate of Vigilance and Anti-Corruption has registered a case against K.N. Nehru, the former Minister for Municipal Administration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.