எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர கா்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஜூன் 13 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கோவை, தென்காசி, திருப்பூா், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அந்த மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஜூன் 11 வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில்10.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மீனம்பாக்கம்-104.72, தொண்டி-103.28, நுங்கம்பாக்கம்-103.1, நாகப்பட்டினம், தஞ்சை-102.2, பரங்கிப்பேட்டை-101.84, திருச்சி-101.66, மதுரை நகரம்-101.12, புதுச்சேரி-100.76, திருத்தணி-100.58, காரைக்கால், விமான நிலையம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. உபாசி, சோலையாா், சின்கோனா (கோவை), விண்ட் வொா்த் எஸ்டேட், தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி)-50 மி.மீ., நெய்யூா் (கன்னியாகுமரி), வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை)- 40 மி.மீ., அவலாஞ்சி, செருமுள்ளி (நீலகிரி)-30 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.