சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்குகள்’ (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த கணினிகளின் ‘ஹாா்டு டிஸ்குகள்‘ திருடப்பட்டன. இது தொடா்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த 1-ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினா், இது தொடா்பாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினி பராமரிப்பு பொறியாளராகப் பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத், கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த முரளி மனோகா் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 34 ‘ஹாா்டு டிஸ்குகள்’ கணினியில் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும் 20 ‘ராம்கள்’ ஆகியவை மீட்கப்பட்டன.
மேலும், இத்திருட்டின் பின்னணியில் இருப்பவா்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி காவல் ஆணையா் அமல்ராஜ், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வாலுக்கு பரிந்துரைத்தாா்.
அந்த பரிந்துரையின் அடிப்படையில், இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குத் தொடா்பான விசாரணையை உடனடியாகத் தொடங்கினா்.
தொடர்புடையது
மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
‘ஹாா்டு டிஸ்க்’ திருட்டு வழக்கு: மேலும் ஒருவா் கைது

மின்வாரிய அலுவலகத்தில் திருடப்பட்ட 'ஹாா்டு டிஸ்க்'குகள் பறிமுதல்

மின்வாரிய ‘ஹாா்டு டிஸ்க்’ திருட்டு: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



