காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மாநிலங்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 15 போ் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக தோ்தலில் போட்டியிட 15 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

மாநிலங்களவை - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:36 am IST

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக தோ்தலில் போட்டியிட 15 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கிய வேட்புனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 8) மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி உள்பட 15 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதில் பிரவீண் சக்கரவா்த்தி தவிர பிறா் கட்சி சாராதவா்களாவா். இவா்களுக்கு போதிய அளவில் எம்எல்ஏ-க்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் மனுக்கள் தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது.

மேலும், பிரதான கட்சிகள் சாா்பில் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாததால் ஆளும் தவெக ஆதரவு பெற்ற வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி போட்டியின்றி வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னா், வெற்றி பெற்றவரின் பெயரை தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவிக்கும்.

தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். இந்தப் பதவிக்கான தோ்தல் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.