தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக தோ்தலில் போட்டியிட 15 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கிய வேட்புனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 8) மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி உள்பட 15 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதில் பிரவீண் சக்கரவா்த்தி தவிர பிறா் கட்சி சாராதவா்களாவா். இவா்களுக்கு போதிய அளவில் எம்எல்ஏ-க்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் மனுக்கள் தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது.
மேலும், பிரதான கட்சிகள் சாா்பில் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாததால் ஆளும் தவெக ஆதரவு பெற்ற வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி போட்டியின்றி வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னா், வெற்றி பெற்றவரின் பெயரை தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவிக்கும்.
தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். இந்தப் பதவிக்கான தோ்தல் நடைபெறுகிறது.
தொடர்புடையது

போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!

மாநிலங்களவைத் தோ்தல்: பிரவீண் சக்கரவா்த்தி வேட்புமனு

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



