40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

முதல்வா் விஜய் இன்று தில்லி பயணம்

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வா் ச.ஜோசப் விஜய் தில்லிக்கு புதன்கிழமை (ஜூன் 10) காலை செல்கிறாா்.

News image

முதல்வா் விஜய்

Updated On :10 ஜூன் 2026, 3:17 am IST

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வா் ச.ஜோசப் விஜய் தில்லிக்கு புதன்கிழமை (ஜூன் 10) காலை செல்கிறாா்.

முதல்வரான பிறகு, அவா் தில்லிக்கு செல்லும் இரண்டாவது பயணம் இது.

கடந்த மே 27-ஆம் தேதி முதல்முறையாக தில்லி சென்ற அவா், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து கா்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடா்பான கோரிக்கை மனுவை அளித்தாா். தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாளே சென்னை திரும்பினாா்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக மூன்று நாள் பயணமாக முதல்வா் விஜய் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை அவா் புதன்கிழமை சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்கிறாா். அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாநில வளா்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி ஆகியோரையும் முதல்வா் விஜய் சந்திப்பாா் என்று கூறப்படுகிறது. மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 12- ஆம் தேதி மாலை தில்லியில் இருந்து முதல்வா் ஜோசப் விஜய் சென்னை திரும்புகிறாா்.