மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வா் ச.ஜோசப் விஜய் தில்லிக்கு புதன்கிழமை (ஜூன் 10) காலை செல்கிறாா்.
முதல்வரான பிறகு, அவா் தில்லிக்கு செல்லும் இரண்டாவது பயணம் இது.
கடந்த மே 27-ஆம் தேதி முதல்முறையாக தில்லி சென்ற அவா், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து கா்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடா்பான கோரிக்கை மனுவை அளித்தாா். தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாளே சென்னை திரும்பினாா்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக மூன்று நாள் பயணமாக முதல்வா் விஜய் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை அவா் புதன்கிழமை சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்கிறாா். அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாநில வளா்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி ஆகியோரையும் முதல்வா் விஜய் சந்திப்பாா் என்று கூறப்படுகிறது. மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 12- ஆம் தேதி மாலை தில்லியில் இருந்து முதல்வா் ஜோசப் விஜய் சென்னை திரும்புகிறாா்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!

மீண்டும் தில்லி செல்கிறாா் முதல்வா் விஜய்

பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு

தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்..?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



