தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

717 மதுக்கடைகள் மூடல்: அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு!

717 மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

News image

மதுக்கடை - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 11:44 am IST

717 மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைகளுக்கு அருகில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பயணிகளுக்கான இருக்கை வசதி இல்லை. பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி சுகாதாரமாக இல்லை. மிக மோசமான இந்த நிலையை விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல, திண்டுக்கல் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அது சரியான இடமாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

திண்டுக்கல்லில் உள்புற சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் என்ற முறையில் பொறுப்பேற்ற 20 நாள்களில் தனி நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வந்த ரூ.1,200 கோடி அரசுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறேன்.

தமிழகத்தில் அரசு மதுக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிப்பது வரும் சட்டப்பேரவைத் கூட்டத் தொடருக்கு முன்பாக தடுத்து நிறுத்தப்படும். மதுப் புட்டிகளில் என்ன விலை குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்தக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த 717 கடைகள் கணக்குக் காட்டுவதற்காக மூடப்படவில்லை. அதிகளவில் வர்த்தகம் நடைபெறும் கடைகள்கூட, மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளால் ஓராண்டில் அரசுக்கு ரூ. 8,000 கோடி முதல் ரூ. 11,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்” என்றார்.

Summary

Minister for Prohibition and Excise Vignesh stated that the government has incurred a revenue loss of rs. 11,000 crore due to the closure of 717 liquor shops.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.