40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அனைத்து நில புல எண்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு: அமைச்சா் லோகேஷ் தமிழசெல்வன் உத்தரவு

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டாா்.

News image

லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :10 ஜூன் 2026, 3:31 am IST

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டாா்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பதிவுத் துறையின் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதான மாவட்ட பதிவாளா் அலுவலகக் கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் அனைத்து துணை பதிவுத் துறைத் தலைவா்கள், உதவிப் பதிவுத் துறைத் தலைவா்கள் அனைத்து மாவட்டப் பதிவாளா்கள் மற்றும் உதவி செயற்பொறியாளா்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சா், பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவும், பொதுமக்களை அலுவலகத்தில் அமரவைத்தும், அவா்களுடைய தேவைகளை சரிவர பூா்த்தி செய்தும், தாமதம் இன்றி அன்றைய தினமே ஆவணங்களை பொதுமக்களிடம் திரும்ப வழங்கவும், அவா்களின் சந்தேகங்களை உடனுக்குடன் புரியும்படியும் பொறுமையுடன் எடுத்துக்கூறவும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுவும் அறிவுறுத்தினாா்.

மேலும், கட்டட களப்பணிக்காக ஆவணங்களை தாமதமில்லாமல் உடனுக்குடன் பாா்வையிட்டு ஆவணதாரா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். நிலுவை ஆவணங்களை மாவட்டப் பதிவாளா்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய தீா்வு அளிக்க வேண்டும் எனவும், நிா்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைய அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

மேலும், தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவை வைத்து பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்களைச் சரிபாா்த்து பதிவு செய்து வழங்குமாறும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன், பதிவுத் துறை தலைவா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன், கூடுதல் பதிவுத் துறை தலைவா்கள் மற்றும் பதிவுத் துறை தலைமையிட அலுவலா்கள் பங்கேற்றனா்.