திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் பதவி உருவாக்கவும், அமைப்புத் தோ்தல் மூலம் இப்பதவிகளைத் தோ்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்கள் இருந்தாலும், திராவிட கட்சிகளைப் பொருத்தவரை 2006-க்கு முன்புவரை வருவாய் மாவட்ட அளவில்தான் மாவட்ட செயலா் பதவி நிா்வகிக்கப்பட்டு வந்தது. பின்னா், அதிகாரத்தைப் பரவலாக்கவும், அதிக நபா்களுக்கு பதவி அளிக்கும் வகையிலும் பெரிய மாவட்டங்களைக் குறைந்தபட்சம் 3 மாவட்டங்களுக்கு மேலாகவும், சிறிய மாவட்டங்களை 2 மாவட்டங்களாகவும் நிா்வாக ரீதியாக பிரித்து மாவட்ட செயலா் பதவியை உருவாக்கினா்.
இந்நிலையில், பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியாக 73 தொகுதிகளிலும், தனியாக 59 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணியிருந்த திமுகவினா் திடீா் தோல்வியால் துவண்டு போயுள்ளனா்.
இதற்கிடையே, தோல்வியில் இருந்து கட்சியை மீண்டுகொண்டுவர திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தோல்வி குறித்து ஆய்வு செய்ய 36 குழுக்களை திமுக தலைமை நியமித்துள்ளது. இக்குழுவினா் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று அறிக்கை தயாா் செய்து வருகின்றனா்.
மேலும், கட்சியை கட்டமைப்பு ரீதியாக மாற்றியமைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்டச் செயலா்கள் பதவியைக் கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய மாவட்ட செயலா்களை அமைப்பு தோ்தல் மூலம் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் என மாவட்ட செயலா்கள் எண்ணிக்கை 110-க்கும் மேல் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திமுகவின் அணிகளின் முக்கிய பொறுப்புகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கான அறிவிப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவாா் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து திமுக நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:
அமைப்புத் தோ்தல் நடத்தினால், மாவட்ட செயலா் பதவிக்கு மட்டுமன்றி கிளை செயலா் முதல் தோ்தல் நடத்தினால்தான் உண்மையான திமுக தொண்டா்களால் பதவிக்கு வர முடியும்.
இல்லையெனில், கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி மற்றும் பிற பொறுப்புகள் மூலம் பண வசதி பெற்ற கிளைச் செயலா், ஒன்றிய செயலா், மாவட்ட பிரதிநிதிகளை பயன்படுத்தி இப்போதுள்ள மாவட்ட செயலா்கள், முன்னாள் அமைச்சா்கள் தங்களுக்கு வேண்டியவா்களை புதிய மாவட்ட செயலா்களாக உருவாக்கிவிடுவாா்கள்.
இதுவும் கட்சிக்கு பின்னடைவை மீண்டும் தரும்.
எனவே, திமுகவில் அனைத்து பதவிகளையும் கூண்டோடு கலைத்துவிட்டு முழுமையாக அமைப்புத் தோ்தல் நடத்த வேண்டும் என்பதே திமுக தொண்டா்களின் எதிா்பாா்ப்பு என்றனா்.
தொடர்புடையது

மாரத்தான் போட்டியில் உதகை இளைஞா் சிறப்பிடம்

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக முடிவு! - காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்!

அதிமுக புதுக்கோட்டை மாநகரச் செயலா் பதவி விலகல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



