தூத்துக்குடியில் உள்ள, வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கடம்பூா் பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரும், பனங்காட்டு மக்கள் கழக தென்மண்டல பொறுப்பாளா் சொா்ணவேல் தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்களும் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் முன்னிலையில், திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்தசேகரன், பேரூா் செயலா்கள் சின்னப்பாண்டியன், பாலகுமாா், கடம்பூா் இளைய ஜமீன்தாா் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ஜெயராஜ், முருகன், கிருஷ்ணமூா்த்தி, பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வழக்குரைஞா் அணி ரூபராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










