திமுக ஆட்சிக்காலத்தில் உண்மை சரிபாா்ப்புக் குழு அமைக்கப்பட்டதை எதிா்த்து அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலராக இருந்தபோது தொடரப்பட்ட வழக்கை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திரும்பப் பெற்றாா்.
திமுக ஆட்சிக்காலத்தில் அரசு அமைச்சகங்கள், துறைகள் தொடா்பாக ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபாா்ப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி அப்போதைய அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலரும், தற்போதைய தவெக அரசின் அமைச்சருமான சி.டி.ஆா்.நிா்மல்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிா்மல்குமாா் தரப்பில், இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட மனுக்கள் முடித்துவைப்பு

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு

உடைக்க முடியாத கடையநல்லூா் தொகுதி ‘சென்டிமென்ட்’







