தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸின் பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சோ்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினா சி.வி. சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். காலியாக உள்ள இந்த இடத்தை காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்ரவா்த்திக்கு ஒதுக்குவதாக ஆளும் தவெக ஒப்புதல் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரவீண் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதில், பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனுவில் மட்டுமே 10 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம் இருக்கின்றன. மற்ற 14 சுயேச்சைகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குக் காங்கிரஸின் பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி இன்று தெரிவித்துள்ளார்.
Election Officer Thenmozhi has announced that Congress's Praveen Chakravarty has been elected to the Rajya Sabha from Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







