நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியா் நியமனம்

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Updated On :17 ஜூன் 2026, 1:09 am IST

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த கே. பொற்கொடி, சமூக நலத் துறை கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியராக (வளா்ச்சி) இருந்த ஆா். ஐஸ்வா்யா நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.