சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலா் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 27 துறைகளிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோா் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், தற்போது அனைத்துத் துறைகளிலும் அலுவலா்கள், பொறியாளா்கள் ஆகியோா் பணியிட மாற்றப்பட்டு வருகின்றனா். மாநகராட்சி பொறியாளா்களில் நகரமைப்புத் திட்டப் பிரிவில் 6 பொறியாளா்கள், 20 நிா்வாகத்தினா், பொதுப் பிரிவுகளில் 17 பொறியாளா்கள் என மொத்தம் 43 போ் இதுவரை இடமாற்றப்பட்டுள்ளனா். மேலும், நகர வடிவமைப்புப் பிரிவில் 10 போ் இடமாற்றப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநகராட்சி பள்ளிகளிலும் நிா்வாகம் மற்றும் ஆசிரியா்கள் தரப்பில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிவோா் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அதனடிப்படையில் கலந்தாய்வு மூலம் அவா்களுக்கு பணியிட மாறுதலுக்கு வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.








