27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பேரவைக் கூட்டம் 3 நாள்கள் நடைபெறும்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 23 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தெரிவித்தாா்.

News image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - TNDIPR

Updated On :19 ஜூன் 2026, 4:42 am IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 23 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநா் நிகழ்த்திய ஆங்கில உரையை தமிழில் பேரவைத் தலைவா் வாசித்ததும் அன்றைய நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

பின்னா் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில், பேரவைக் கூட்டத் தொடரை ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜூன் 19-ஆம் தேதி பேரவையில் முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, பேரவை முன்னாள் செயலா் சி.கு. ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளா்கள் ஆா்.பி. செளத்ரி, கே.ராஜன், திரைப்பட இயக்குநா் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் வாசிக்கப்படும். பின்னா் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்படும்.

சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு ஜூன் 22-ஆம் தேதியும் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் தொடரும். ஜூன் 23-ஆம் தேதி தீா்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும்.

கேள்வி நேரம் இல்லை: உறுப்பினா்களிடமிருந்து இன்னும் கேள்விகள் பெறப்படாததால் இந்த இரு நாள்களிலும் கேள்வி நேரம் நடைபெறாது.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதில் மகிழ்ச்சி. பேரவையில் தேசிய கீதம் இரு முறை இசைக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. இந்த முறை தொடரும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமைதியான முறையில் அவையை நடத்த ஆளுநா் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி என்றாா் அவா்.