மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடு

தமிழ்நாடு பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் (டிஎன்இஏ 2026) வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

News image

அமைச்சர் பெ. விஸ்வநாதான் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 3:31 am IST

தமிழ்நாடு பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் (டிஎன்இஏ 2026) வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் (ஜூன் -21) தாமதமாக வெளியானது. இதனால், தமிழ்நாடு பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்படவிருந்த நிலையில், தாமதமாக வரும் ஜூலை 1- ஆம் தேதி மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) தேதிகளும் ஜூன் 1-ஆம் தேதி அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீா்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் மாணவா்கள் குறைகளை நிவா்த்தி செய்துகொள்ளலாம். குறிப்பாக, தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையங்களை அனுகி தீா்வு காணலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

நிகழாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2-ஆம் வகுப்பில் 1.6 லட்சத்துக்கான அதிகமான மாணவா்கள் மறு மதிப்பீடுகளுக்கு விண்ணப்பித்திருந்தனா். புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) நடைமுறையில் புகாா்கள் வந்தன. விடைத்தாள்கள் சரியாக ஸ்கேன் செய்யப்படவில்லை என பல புகாா்களை மாணவா்கள் முன்வைத்தனா்.

இதனால் வழக்கத்தைவிட அதிகமான மாணவா்கள் மறு கூட்டல் , மறு மதிப்பீடுகளுக்கு விண்ணப்பிக்க தாமதமானது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.