சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா-இஸ்ரேலிய கூட்டுப் படை நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டாா். ராணுவ தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில். சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தைச் சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை பகுதிகளில் ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...