சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூன்றாவது மொழிக்கான கட்டாயம் இல்லை: கனிமொழி சோமு

கல்விச் சிந்தனை அரங்கில் கனிமொழி சோமு பேசியது குறித்து...

News image
கல்விச் சிந்தனை அரங்கில் கனிமொழி சோமு
Updated On :3 மார்ச் 2026, 7:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திமுக எம்.பி., கனிமொழி சோமு கலந்துகொண்டனர். இந்த விவாத நிகழ்வை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.

இதில், இளைஞர்களை மேம்படுத்துதல் : இந்தியாவின் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் கனிமொழி சோமு பேசியதாவது:

''திமுகவின் முதுகெலும்பாக இளைஞர் அணி உள்ளது. அறிஞர் அண்ணாவில் இருந்து தற்போது உள்ள தலைவர்கள் பலரும் அதில் இருந்து வந்தவர்கள்தான்.

தாய் மொழியில் பேசுகிறோம். மற்றவர்களுக்கு கருத்துகளைப் பரிமாற ஆங்கிலம் பேசுகிறோம். அது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கருத்துகளைப் பரிமாற உதவுகிறது. ஹிந்தி அறிந்துகொள்வதற்கான தேவை என்ன? மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை.

கல்விக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆன்லைனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களே பயனர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். அரசு அதிகாரிகளாக இருந்து சேவையாற்றவும் விரும்புகின்றனர். ஆனால், சமூக வலைதளப் பயன்பாடு சில இளைஞர்களை சீரழிக்கிறது. சிலர் நேர்மறையாக பயன்படுத்தினாலும், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தவறான வழிகளில் செல்வதை மறுக்க முடியாது.

அரசியல் எளிதானது அல்ல. இன்று போட்டியிட்டு நாளை வெற்றி பெற முடியாது. அதற்கு துடிப்பான நோக்கமும் அயராத உழைப்பும் இளைஞர்களுக்கு அவசியமானது '' என கனிமொழி சோமு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.