தந்தை உயிரிழந்த சோகத்திலும் +2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியினர். இவர்களுடைய மகன் சாய்நிஷாந்த் (17).
சாய்நிஷாந்த் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சாய்நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச் 6) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சாய்நிஷாந்திற்கு இன்று வேதியியல் தேர்வு நடைபெறுவதால், தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் வேதியியல் தேர்வு எழுத சென்றுள்ளார்.
சாய்நிஷாந்த் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு தனது தந்தை காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்றார். பள்ளிக்கு சென்ற மாணவன் சாய்நிஷாந்தைப் பார்த்து, சக நண்பர்களும் கட்டியணைத்து அழுதனர்.
Summary
Many are praising the student's actions in writing the +2 public exams despite the tragedy of his father's death.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!

3.4.1976: காப்பியடித்து பட்டம் பெற்ற மாணவனின் கண்ணீர் கடிதம்!

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவி

மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி சாலை விபத்தில் பலி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


